ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், (A well Suddenly Buried In The Ground) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்னந்தோப்பில் தோண்டப்பட்டிருந்த பாசனக் கிணறு திடீரென்று மண்ணுக்குள் புதைந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதுநாராயணபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கு முருகவனம் என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அந்த கிணறு திடீரென்று உள்வாங்கியது மட்டுமின்றி கீழே சரிந்து விழுந்துள்ளது. அதனுடன் மோட்டார் அறையும் சரிந்து விழுந்துள்ளது.
இது பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, கிணறு உள்வாங்கி ஒரு பள்ளம் ஏற்பட்டு அதன் பின்னர் பூமிக்குள் சரிந்து விழுந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மோட்டார் அறையும் மண்ணில் புதைந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டது எனக்கூறினர். விவசாய கிணறு திடீரரென்று சரிந்து கீழே விழுந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.