Pondicherry Cm Announcement Pongal Gift: புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

புதுவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (Pondicherry Cm Announcement Pongal Gift) ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.470 மதிப்புள்ள பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அரசுடைய எவ்வித உதவியும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தோம்.

இதற்காக வருகின்ற ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்காக முடிவு செய்துள்ளோம். பொங்கலுக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுவிடும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும்.
மேலும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். அதனை ஏற்று தற்போது பால்விலையை ரூ.3 உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.