Siddaramaiah : முட்டை சம்பவத்திற்கு பிறகு முழு எச்சரிக்கை: தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பு பெற சித்தராமையா திட்டம்

பெங்களூரு: (Siddaramaiah Private Security) வெள்ள சேதத்தை பார்வையிட குடகு மாவட்டத்திற்கு சென்ற போது, ​​மடிகேரியில் முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டது.

பெங்களூரு: (Siddaramaiah plan to get Private Security) குடகு மாவட்டம் மடிகேரியில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்தும், அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பாதுகாப்பு விவகாரம் வெளியாகி, கூடுதல் பாதுகாப்பை பெற சித்தராமையா யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மடிகேரியில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கார் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது (Siddaramaiah’s car was attacked with eggs). இந்த தாக்குதலில் சித்தராமையா மீது முட்டை விழவில்லை என்றாலும், இந்த சம்பவம் எதிர்க்கட்சி தலைவருக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் யோசனை உருவாகி உள்ளது. இதற்கிடையில், தாவணங்கேரியில் நடைபெற்ற சித்தராமையாவின் 75 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கிடைத்த‌ வெற்றி, சித்தராமையாவுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது, அதே நம்பிக்கையையும், தனது புகழையும் தக்க வைக்கும் நோக்கத்தில், அரசின் பாதுகாப்பு குறைபாட்டை முன்னிறுத்தி, தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பிற்கு செல்ல சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

இதுவரை, சித்தராமையாவுக்கு கொலை செய்வதாக மிரட்டி மூன்று கடிதங்கள் (Three threatening letters ) வந்துள்ளன. தற்போது அரசு பாதுகாப்பு மற்றும் போலீசார் முன்னிலையில் சித்தராமையா மீது முட்டை வீசும் முயற்சி நடந்துள்ளது. எனவே, சித்தராமையா தனது பாதுகாப்பிற்கு அரசு அளித்துள்ள பாதுகாப்பை இனி நம்புவது கடினம். எனவே, தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பை பெறுவதே சிறந்ததது என சித்துராமையாவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இது குறித்து தீவிரமாக யோசித்து, அரசுப் பாதுகாப்பிற்குப் பதிலாக தனிப் பாதுகாப்பு பெறுவது குறித்து தனது நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை (Consult with close friends) நடத்தினார். மறுபுறம், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திராவும் தனது தந்தையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார், மேலும் பாதுகாப்பிற்காக அரசாங்கத்தை நம்ப முடியாது. எனவே, தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பை பெறுவது உத்தமம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, சித்தராமையாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க தயாராக உள்ளோம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை (Chief Minister Basavaraj bommai) கூறினார். ஆனால், அரசின் தோல்வியை மக்களிடம் தெரிவித்து, அவர்களை தன்பால் இழுக்கும் வகையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா தனியாரின் செக்யூரிட்டி பாதுகாப்பை நாட உள்ளதாக கூறப்படுகிறது.