School Teacher Arrested In Pocso: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் அதிரடி கைது

சேலம்: அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு (School Teacher Arrested In Pocso) பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், பனங்காடு அருகே சேலத்தாம்பட்டி என்ற ஊர் உள்ளது. அங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் 250க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியில் 5ம் வகுப்பு தமிழ் ஆசிரியர் படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், அது மட்டுமின்றி மாணவிகள் கழிவறையில் செல்லும் சமயங்களில் எட்டி பார்த்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி ஆசிரியரை தாக்கியுள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்த டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையிலான போலீசார் சென்று ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். இதன் பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

பள்ளியில் படிக்க வரும் மாணவிகளிடம் இது போன்ற சில ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவது தொடர்கதையாகவே உள்ளது. இது போன்ற ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே தவறு செய்ய பயப்படுவார்கள் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகவே உள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:RRR Naatu Naatu Song: ஆஸ்கார் இறுதிக்கு தேர்வாகி உள்ள நாட்டு நாட்டு பாடல்

முந்தைய செய்தியை பார்க்க:Extra Buses Running Today: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்