Roja at Tiruthani Murugan temple: திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா குடும்பத்துடன் சாமி தரிசனம்

காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ரோஜா.

திருத்தணி: Sami darshan with actress Roja family at Tiruthani Murugan temple: ஆடிக்கிருத்தியையொட்டி ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா குடும்பத்துடன் வந்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவில் (Thiruthani Dandayuthapani temple), கடந்த 21ம் முதல் ஆடி கிருத்திகை விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிக்கிருத்திகையான இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


மேலும் பால் காவடி, பன்னீர் காவடி புஷ்ப காவடி (Paal Kavadi, Panneer Kavadi, Pushpa Kavadi) எடுத்து வந்தும் அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.


இந்நிலையில், தமிழ் திரைப்பட நடிகை, ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா (Andhra Tourism Minister Roja) தனது கணவர், பிரபல இயக்குனருமான ஆர் கே செல்வமணியுடன் (Director R.K.Selvamani) திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வந்து, வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் மூலவர் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தார்.


இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோஜா, திருத்தணியில் உள்ள முருகன் கோவிலை ஆண்டுதோறும் வந்து தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், தானும் குடும்பமும் மட்டுமல்லாது, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி (Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy) குடும்பத்தாரும் நீடூழி வாழ முருகனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.