Rs.3 lakh to kabaddi player family: உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கடலூர்: Rs.3 lakh to kabaddi player family: பண்ருட்டி அருகே கபடி விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21) கபடி வீரர். இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படித்து வருகிறார். மேலும் சேலத்திலேயே கபடி அகாடமி (Kabaddi Academy in Salem) ஒன்றில் பயிற்சியும் பெற்று வந்தார்.

கடந்த 25ம் தேதி (நேற்று முன்தினம்) பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி (District level kabaddi tournament) நடைபெற்றது. இந்த போட்டியில் விமல்ராஜ் கலந்து கொண்டு விளையாடினார். அதில் துள்ளி குதித்து விளையாடிய அவர், எதிரணி வீரர் பிடிக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த விமல்ராஜ், மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.

அதிர்ச்சியில் சக வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். The death of fainting while playing kabaddi near Panruti அவரை பரிசோதித்த டாக்டர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இகுறித்து தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்குப்பின் விமல்ராஜின் உடல் நேற்று (26ம் தேதி) சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது உடலுக்கு கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு புதைத்த போது, அவரது நண்பர்கள் அவர் கபடி விளையாடி பெற்ற கோப்பையினை உடன் வைத்து புதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கபடி வீரரின் குடும்பம் மகனை இழந்து பரிதவிக்கும் நிலையில், அரசு சார்பில் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம். தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (வயது 21) என்ற இளைஞர் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.