Ropecar Service: சென்னை: மெரினா, பெசண்ட் நகர் இடையே ரோப்கார் சேவை

சென்னை: கலங்கரை விளக்கம் முதல் பெசண்ட் நகர் (Ropecar Service) இடையில் சுமார் 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை தொடங்கப்படுவதற்கான பணிகள் நடைபெறுகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் 10 இடங்களில் ரோப் கார் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கின்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தமிழகத்தில் சென்னை, கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் இடையில் 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை தொடங்கப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ரோப்வே அமைப்புகளுடன் ஆய்வு செய்த பின்னர் இத்திட்டம் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் சுற்றுலாத்துறை மேம்படும். வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.