Republic Day Celebration: குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணி தீவிரம்

சென்னை: குடியரசு தினவிழாவை முன்னிட்டு (Republic Day Celebration) சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுவதாகவும், இதற்காக 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். வருகின்ற 26ம் தேதி அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை காமராஜர் சாலை வாலஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி உரையாற்றுவார்.

இதனையொட்டி சென்னை காமராஜர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 6,800 போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

அது மட்டுமின்றி சென்னை விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள்
மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும்
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.