Vehicle Search In Blast Area: காஷ்மீர் குண்டுவெத்த பகுதியில் பாதுகாப்பு படை தீவிர சோதனை

ரஜோரி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டம் (Vehicle Search In Blast Area) டாங்கிரி கிராமத்திற்குள் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் 3 வீடுகளில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரீதம் லால் என்பவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றபோது அடுத்த அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. அதாவது அவரது வீட்டுக்கு அருகே மிக பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சான்வி சர்மா 7, விஹான் குமார் சர்மா 4, இரண்டு சகோதர, சகோதரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற 14 மணி நேரத்துக்குள் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு படையினர் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் ரஜோரி நகரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தப்பியோடி மர்ம நபர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது.