CM Basavaraj bommai : பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு விசாரணை: போலீசாருக்கு முழு சுதந்திரம்

பெங்களூரு: Praveen Nettaru’s murder case gives complete freedom to the police : பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு விசாரணையில் போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரவீன் நெட்டாரு கொலை வழக்கின் விசாரணையில் காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று நம்புகிறேன்.

இதனிடையே பிரவீன் நெட்டாரு கொலை வழக்கின் விசாரணை விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் ஆவணங்கள் தயாரிப்பதற்கான பணிகள் செயல்பாட்டில் உள்ளன. அது முடிந்தததும் இந்த வழக்கு விரைவில் தேசிய புலனாய்வு முகமையிடம் வசம் ஒப்படைக்கப்படும்.

ஏற்கனவே இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மங்களூரு மற்றும் கேரளாவில் முதற்கட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தென்கன்னட மாவட்டத்தில் (South Kannada District) கொலை செய்யப்பட்ட ஃபாசிலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளேன் என்றார்.

குரங்கு அம்மை (Monkey pox) மற்றும் பயிர் சேத இழப்பு குறித்த நாளை கூட்டம்

அன்மைக்காலமாக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேத‌ இழப்புகள் மற்றும் குரங்கு அம்மையை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நாளை இரண்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, “கொப்பள் மாவட்டம் (Koppal District) அஞ்சனாத்ரி மலையின் விரிவான வளர்ச்சிக்காக ரூ. 100 கோடியை மாநில அரசு வழங்கியுள்ள நிலையில், அங்கு அதனைப் பார்வையிடுவதற்காக நாளை புறப்பட்டுச் செல்கிறேன். ரூ. 100 கோடி நிதியில் சுற்றுலா வசதிகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை முடிக்க வேண்டும். கூடிய விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

சித்தராமோத்ஸவா பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை

எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா (Leader of Opposition Siddaramaiah) தனது 75 வது பிறந்த நாளை சித்தராமோத்சவ விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளார். இதைப் பற்றி நாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் சித்தராம கடவுளின் பக்தர்கள். சுவாமிக்கு தினமும் உற்சவம் நடத்துகிறோம் என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை.

மேலும் மாவட்ட அளவில் ஜனோத்ஸவா (Janotsava) நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். மாவட்ட, கோட்ட அளவில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். மூன்ற அல்லது நான்கு நாட்களில் இது குறித்த விவரத்தை அறிவிப்போம் என்றார் அவர்.