Power Cut in Chennai Today: சென்னையில் இன்றைய மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

சென்னை: Power Cut in Parts of Chennai Today:சென்னை பெருநகர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் நேரங்களின் பட்டியலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tamil Nadu Generation and Distribution Corporation) வெளியிட்டுள்ள அறிவிப்பில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் இன்று (25.07.2022, திங்கட்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) அறிவித்துள்ளது.

அதன்படி, மயிலாப்பூர், தாம்பரம், தி.நகர், பெரம்பூர், தரமணி ஐடி காரிடார் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மயிலாப்பூர் (Mylapore): மயிலாப்பூர் கிழக்கு-டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை உயர் சாலை, வி.எம்.தெரு, லஸ் சர்ச் ரோட்டின் ஒரு பகுதி.

தாம்பரம் (Tambaram): சிட்லபாக்கம் – சர்வமங்களா நகர், அம்பேத்கர் நகர், மீனாட்சி தெரு, திரு.வி.க.நகர், மணிமேகலை தெரு; ராதா நகர் – சீனிவாச நாயுடு தெரு, தனலட்சுமி தெரு, ஏஜிஎஸ் காலனி, நன்மங்கலம் மெயின் ரோடு மற்றும் நெமிலிச்சேரி ஹை ரோடு.

தி.நகர் (T Nagar): மேற்கு மாம்பலம் – பரோடா பிரதான தெரு, பஞ்சாப் கார்டன், எல்லை அம்மன் கோயில் தெரு, காந்தி தெரு மற்றும் புஸ்பாவதியம்மாள் தெரு.

பெரம்பூர் (Perambur): குமரன் நகர், சக்திவேல் நகர், மூலக்கடை, வெற்றி நகர் மற்றும் சிம்சன் குரூப்.

ஐடி காரிடார் (IT Corridor): பாலாஜி நகர், பால்மாரா கார்டன், மவுண்ட்பேட்டன் தெரு, கண்ணகி நகர் மற்றும் தோரைப்பாக்கம்.

ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) தெரிவித்துள்ளது.