power cut areas in Chennai today and tomorrow: சென்னையில் இன்றும், நாளையும் மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

சென்னை: Announcement of power cut areas in Chennai today and tomorrow. சென்னையில் இன்றும், நாளையும் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக ஐ.டி.காரிடர் பகுதிகளான தரமணி காமராஜ் நகர் 1, 2, 7 மற்றும் 8வது தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிவந்தவுடன் அந்த பகுதிகளில் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நாளை, (15.10.2022 சனிக்கிழமை), காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, பராமரிப்பு பணி காரணமாக போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர், ஐ.டி.காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி மின்நிறுத்த பகுதிகள்:

போரூர் பகுதியில் பூந்தமல்லி ருக்மணி நகர், முத்தமிழ் நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம் கோவூர் பாலாஜி நகர், பூசணிகுளம் மற்றும் பஜார் மெயின் ரோடு, சுபலட்சுமி நகர், பாபு கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையாறு பகுதியில், ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் தேவி நகர், பெத்தல் நகர் 1 முதல் 24வது தெரு வடக்கு, திருவள்ளுவர் சாலை, ஈ.சி.ஆர். பகுதி, தாமஸ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வானகரம் பகுதியில், எஸ்.ஆர்.எம்.சி செட்டியார் அகரம் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், திரு.வி.க நகர், நூம்பல் மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி பகுதியில் ஜே.பி.நகர், செந்தில் நகர், கலைமகள் நகர், பிருந்தாவன் அவென்யூ, முருகப்பா பாலிடெக்னிக், பி.எஸ்.என்.எல். – சி.டி.எச்.ரோடு, ஆவடி பேருந்து பணிமனை, கஸ்தூரி பாய் நகர், செங்குன்றம் பாலவாயல், கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், கண்ணம்பாளையம், பி.டி.மூர்த்தி நகர், கல்பக நகர், மருதுபாண்டி நகர், புழல் மகாவீர் கார்டன், சக்திவேல் நகர், சிவராஜ் தெரு, காந்தி மெயின் ரோடு, மேக்ரோ மார்வெல் நகர், பட்டாபிராம் ராஜீவ்காந்தி நகர், அண்ணா நகர், பாலாஜி நகர், செந்தமிழ் நகர், விவேகானந்தா அவென்யூ, மிட்டணமல்லி காலனி, பிருந்தாவனம் நகர், கேரிசன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர் பகுதியில் அயபாக்கம் 1000 முதல் 8500 டி.என்.எச்.பி. அயப்பாக்கம், வி.ஐ.பி. பாக்ஸ்.

ஐ.டி.காரிடர் பகுதியில் ஈ.டி.எல் பிள்ளையார் கோயில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, அஞ்சல் அலுவலகம், ஓ.எம்.ஆர்.பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.