God Idols Not Safe Temple: கோயில்களில் சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லை: முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சிலை (God Idols Not Safe Temple) கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் செய்தியாளர்கள் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறோம். இதில் நாகை, திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற கோயில்களில் சாமி, செப்பு திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. சாமி சிலைகள் பாதுகாப்பின்றி இருப்பது வேதனையாக உள்ளது. இதற்காக கோயில்களில் சிலைகள் வைப்பதற்கு மிகவும் பாதுகாப்பான இடம் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரையில் அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு செய்யவில்லை .

மேலும் கோயில்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருக்கும் சிறப்பு படையால் எவ்வித பயனும் கிடையாது. கோயில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமனம் செய்வது என்பது பாதுகாப்பற்ற செயல். இதுவரையில் கோயிலில் உள்ள பாதுகாப்பு படை எந்த ஒரு கொள்ளையையும் தடுத்து நிறுத்தவில்லை. எனவே மிகவும் உடல்தகுதி மிக்க இளைஞர்ளை கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு பொன்மாணிக்கவேல் கூறினார்.