பெங்களூரு: ஜனநாயகத்தில் ஒரு நபரை கடவுளாக்குவது (Mallikarjun Kharge Warning) சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் பட்டியலின, பழங்குடியின சமூக மக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கார்கே, ஜனநாயகத்தில் ஒருநபரை மட்டும் கடவுளாக்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்துவிடும். இந்த போக்கு மாறவேண்டும். ஜாதி, மதம் அடிப்படையில் கர்நாடகாவை பா.ஜ.க. பிரிக்கிறது.
மேலும் காலியாக இருக்கின்ற 30 லட்சம் அரசுப்பணிகளை பிரதமர் மோடி நிரப்பவில்லை. ஒருவேளை நிரப்பினால் பா.ஜ.க.வின் விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும் என்பதால் ஒப்பந்தம், தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு பணியமர்த்தி வருகின்றனர். இவ்வாறு கார்கே கூறினார்.