Corona for O.Panneerselvam : ஓ.பன்னீர் செல்வத்திற்கு கரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

Image Credit : Twitter.

சென்னை: O.Panneerselvam Admitted to private hospital : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான‌ ஓ. பன்னீர் செல்வத்திற்கு கடந்த 2 நாள்களாக லேசான இருமல் (Slight cough for 2 days) இருந்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காமராஜர் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று, அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனயடுத்து மருத்துவமனைக்குச் சென்ற அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கரோனா தொற்றின் பாதிப்பு உள்ள உறுதியானது. இதனையடுத்து, ஓ. பன்னீர் செல்வம் எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் ( Private hospital) சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கரோனா தொற்றின் பாதிப்பு லேசாக உள்ளதாகவும், அதனால் அவர் இரண்டொரு நாளில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்புவார் என தெரியவந்துள்ளது.

இதனிடையே தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு (Minister Nasar) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து சென்னை ஆவடியில் உள்ள அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.