O. Panneerselvam: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன்: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி

தமிழ்நாடு : O. Panneerselvam: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று தேசியக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களை சந்தித்து பாஜகவைச் சேர்ந்த குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு ஆதரவு திரட்டினார். அவருக்கு முதலில் அவருக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வந்த ஓ. பன்னீர்செல்வம் மேடை ஏறாமல் தலைவர்கள் வரிசையில் காத்திருந்தார். மேடையிலிருந்து இறங்கி எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்ற பின்னர், மேடையில் ஏறிய‌ ஓ.பன்னீர் செல்வம், முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து, உரையாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கட்சியின் சட்டவிதிகள்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன். குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவை அதிமுக சார்பில் சந்தித்து ஆதரவை தெரிவித்தேன். தற்போது வரை அதிமுகவின் ஒருங்கிணைபாளராக நான் செயல்பட்டு வருகிறேன் என்றார்.