Corona : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,533 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு

கோப்புப்படம்...

தமிழ்நாடு : Corona cases increasing in TamilNadu : தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சனிக்கிழமை (ஜூலை 2) மட்டும் 2,533 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது சுகாதாரத்துறை இது குறித்துவெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : தமிழ்நாட்டில் சனிக்கிழமை 33,246 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,059 பேரும், செங்கல்பட்டு 393 பேரும், திருவள்ளூர் 142 பேரும், கோவை 117 பேர், கன்னியாகுமரி 88 பேர், காஞ்சிபுரம் 87 பேர், திருச்சி 72 பேர் திருநெல்வேலி 70 பேர், மதுரை 50 பேர், தூத்துக்குடி 62 பேர், சேலம் 38 பேர், ஈரோடு 34 பேர், ராணிப்பேட்டை 29 பேர், விழுப்புரம் 27 பேர், சிவகங்கை 25 பேர், கிருஷ்ணகிரி 19 பேர், விருதுநகர் 17 பேர், பெரம்பலுார், தென்காசி தலா 16 பேர், வேலுார் 15 பேர், தஞ்சாவூர் 14 பேர், திருப்பூர், திருவண்ணாமலை, நாமக்கல் தலா13 பேர், அரியலுார் 12 பேர், தேனி 10 பேர், திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி தலா 7 பேர், நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர் தலா 9 பேர் தேனி 6 பேர், நாகப்பட்டினம், திருப்பத்துார், மயிலாடுதுறை, ராமநாதபுரம் தலா 5 பேர், புதுக்கோட்டை 4 பேர் தர்மபுரி, கடலுாரில் தலா ஒருவருக்கும், மாநிலம் முழுவதும் 2,533 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,80,103 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன்மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,28,758 ஆக உள்ளது. கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,025 ஆக இருந்த நிலையில் சனிக்கிழமை (ஜூலை 2) 1,059 ஆக உயர்ந்துள்ளது .
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,319 ஆக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.