‘Kappalotiya Tamilan’ movie in modern technology: நவீன தொழில் நுட்பத்தில் ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம்: அனுமதி இலவசம்

சென்னை: ‘Kappalotiya Tamilan’ movie in modern technology. வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு நவீன தொழில் நுட்பத்தில் ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

சென்னை , கலைவாணர் அரங்கத்தில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வட சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளினை முன்னிட்டு அன்னாரின் புகழுக்கு, மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் 14 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னையில் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலை நிறுவப்படும். ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரின் இல்லத்திலும், திருநெல்வேலியில் உள்ள அவரின் மணிமண்டபத்திலும் வசிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் ஒலி ஒளி காட்சி அமைக்கப்படும். வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து திரையிடப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து, அன்னாரின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (05.09.2022) காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின். வாழ்க்கை வரலாற்றை அறிந்திடும் வகையிலும், சுதந்திரப்போராட்டத்திற்காக அவர் செயல்பட்ட வீரத்தையும், “சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அற்பணித்த தியாகத்தையும் அனைவரும் அறிந்திடும் வகையில் இத்திரைப்படம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக காட்சியினை பாளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

மேலும், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (06.09.2022) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக நவீன முறையில் (Digital) திரையிடப்படவுள்ளது. இந்த காட்சிகளை காண அனுமதி இலவசம். அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.