Kanchipuram AIADMK Protest: காஞ்சிபுரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: In Kanchipuram, former minister Somasundaram led the AIADMK protest.காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்து வரி , மின் கட்டணம் , பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிலையை போக்கிட, செயல்பாடு அற்ற திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாநகர கிழக்கு, தெற்கு, மேற்கு , வடக்கு அதிமுக சார்பில் காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சரான வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் கடந்த 18 மாத காலமாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு , பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சொத்து வரி , குடிநீர் , மின்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விலை உயர்வு செய்து வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளில் அளித்த ஒன்றைக் கூட நிறைவேற்றாததும் நாள்தோறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பொதுமக்கள் சிக்கி அஞ்சி வருவதாகவும் கூறி தமிழக அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சரும் , அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் பேசுகையில் , விடியல் தருவதாக கூறிவிட்டு பொது மக்களுக்கு கடந்த 18 மாதமாக நாள்தோறும் வாழ்வாதாரத்தை இழக்கும் வகையில் செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்து தொடர்ந்து அதிமுக போராடி வருவதாகவும், ஊடகங்கள் அனைத்தையும் விலைக்கு வாங்கி தங்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் , எங்களுக்கு சாதகமாக செயல்படுவது சிசிடிவி எனவும், இதில் தமிழகத்தில் நடக்கும் சமூக சீர்கேடுகளை நாள்தோறும் வெளியிட்டு வரும் நிலையில் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் விலைவாசி உயர்வுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பேசினார்.