Jewelry shop Manager Arrested: 10 கிலோ வெள்ளி திருட்டு: நகைக் கடையின் மேலாளர் அதிரடி கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பணியாற்றிய (Jewelry shop Manager Arrested) நகைக்கடையிலேயே 10 கிலோ அளவுக்கு வெள்ளி நகைகளை திருடியதாக அக்கடையில் விற்பனை பிரிவின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள அந்தக் கடையில் ஐந்து ஆண்டுகுளாக நகை விற்பனைப் பிரிவு மேலாளராக சித்திகாபாத் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடையில் திடீரென்று 10 கிலோ வெள்ளி நகைகள் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளது. அப்போது அதே கடையில் பணியாற்றிய ரியாஸ் வெள்ளி நகைகளை திருடியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சியின் ஆதாரங்களுடன் கடையின் உரிமையாளர் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியாசையும், அவருக்கு உடந்தையாக இருந்த சபீனா என்ற பெண்ணையும் கைது செய்தனர். நகைக்கடையிலேயே வேலை பார்த்துவிட்டு அங்கேயே திருடியிருப்பது வாணியம்பாடி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.