சென்னை: Indian Oil Bhavan Independence Day Celebration in Chennai: சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இந்திய சுதந்திரதின பெருவிழாவானது சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியன் ஆயிலின் தென் மண்டல செயல் இயக்குனர் சைலேந்திரா மூவர்ண கொடியை ஏற்றி வைத்து டெரிடோரியல் ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த கொண்டாட்டங்களின் போது இந்திய ஆயிலின் தமிழக செயல் இயக்குனர் அசோகன் உள்ளிட்ட பிற உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இந்த விழாவில், இந்தியன்ஆயில் பணியாளர்களுக்கு நீண்ட பணிக்கான சேவை விருதுகளையும் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்ததற்கான பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி உறையாற்றினார்.
மேலும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மற்றும் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வின் இறுதியில் 75வது சுதந்திர பெருவிழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
சென்னை சுங்க அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்:
சென்னையில் சுங்கத்துறை அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து உதவி ஆணையர் டாக்டர் ஆர். நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை சுங்க அலுவலகத்தில் 75- வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மண்டல சுங்க அலுவலகத்தின் தலைமை ஆணையர் எம். வி. எஸ். சௌத்திரி தேசிய கொடியை ஏற்றி வைத்து, அதிகாரிகள் மற்றும் தலைமை ஹாவில்தார்களின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் போது பேசிய தலைமை ஆணையர், எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவித்து, அதன் வாயிலாக வரி இணக்கத்தை மேம்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பும் வகையில் சுங்கத்துறை மேற்கொண்டு வரும் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.
சிறப்பாக பண்ணியாற்றியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை சுங்கத்துறை அலுவலகத்தின் ஊழியர்களுக்கு அவர் சான்றிதழ்களையும் வழங்கினார்.