Holidays for 27 districts today: 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: Holidays for schools and colleges in 27 districts today. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதி ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தைச் சுற்றி கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், வேலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த புயலின் காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் அறிவிக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.