Heavy rainfall alert: சிக்கமகளூர் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கீர்த்தனா இருவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் நாளை 21ஆம் தேதி சிவப்பு அலர்ட் அறிவித்துள்ள நிலையில் 22 ஆம் தேதி மஞ்சள் வண்ண அலர்ட் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால் இதற்கென அதிகப்படியாக மழை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் ஆற்றோரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் மேடான இடங்களுக்கு வர வேண்டும் எனவும் மேலும் காவல்துறை வனத்துறை தீயணைப்பு படை பேரிடர் மீட்பு படையினர் யாரும் வெளியூருக்கு செல்லக்கூடாது எனவும் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் எனவும் மீண்டும் அனைத்து மீட்பு பணிக்கான சாதனங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் ஹிட்டாச்சி ஜேசிபி படகு ரோப் மற்றும் போன்ற அனைத்து சாதனங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் எந்தெந்த பகுதியில் மின்கம்பங்கள் பழுதாகி உள்ளன என்பதை பார்த்து மேலும் உடையும் தருவாயில் இருந்தால் அந்தப் பகுதியில் உடனடியாக மெஸ்காமினர் மாற்ற வேண்டும் பொதுமக்களும் சம்பந்தமின்றி 21ஆம் தேதி 22 ஆம் தேதி வேலை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவித்துள்ளார்



