காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், (Two Government Officers Suspended) ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இருளர் பழங்குடியினரின் கட்டுமான பணியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் கட்டப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளை கட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுத்தார். இருளர் குடியிருப்பு தரமற்ற நிலையில் கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை ஆட்சியர் ஆர்த்தி எச்சரிக்கின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கட்டுமான பணியில் தரமற்ற முறையில் இருப்பதை தொடர்ந்து இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.