Free electricity in Tamil Nadu if BJP comes to power: பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இலவச மின்சாரம்: பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: Free electricity in Tamil Nadu if BJP comes to power: பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரான அர்ஜுனமூர்த்தி இன்று பாஜகவில் இணைந்தார். நடிகர் ரஜினிகாந்தின் தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி நியமிக்கப்படுவதாக இருந்தது. தற்போது அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்ததால், அதற்கான உறுப்பினர் அட்டையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அர்ஜுனமூர்த்திக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மின் கட்டணம் குறித்து மக்கள் இடம் கருத்து கேட்போம் என்று மின்துறை அமைச்சர் கபட நாடகமாடி வருகிறார். வசூல் வேட்டைக்காகவே மாநில அரசு மின்கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்கிறோம் என நாடகம் நடத்தி வருகிறது. எனவே கருத்து கேட்பதை நிறுத்திவிட்டு உடனடியாக மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

தமிழகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி மூலம் சுமார் 30 தற்கொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு கருத்து கேட்கின்றோம் என்று சொல்லுவதை விட்டு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்.

திமுக அறிவித்துள்ள 506 இலவச திட்டங்களில் ஒன்று கூட நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தது. அந்த திட்டங்கள் எல்லாம் வெறும் திட்டங்களாகவே உள்ளன. இலவச மகளிர் பேருந்து எப்போது வருகிறது என்றே தெரியவில்லை. கல்வி, சுகாதாரம் போன்றவை இலவசங்களாக கொடுக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி இலவசமாக கொடுத்த வீடு, சமையல் எரிவாயு இணைப்பு போன்றவை இலவசங்கள் அல்ல. அவை மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை என அவர் தெரிவித்தார்.

பொது மக்களுக்காக செயல்பட கூடியகட்சி பாரதிய ஜனதா கட்சி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு பாஜக என்றும் ஆதரவு அளிக்கும். சில கோயில்களில் பூஜை செய்யும் ஆகம சாஸ்திர முறைகளை சரியாக கடைபிடித்து அதற்கேற்றாற்போல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவசமான மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதிமுக இலவச திட்டங்கள் அறிவித்தால் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அடுத்த தேர்தல் வரட்டும் அதிமுக இலவச திட்டங்கள் அறிவித்தால் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் இருக்க என்று பார்ப்போம். அதன் பின் அதை பற்றி பேசலாம் தற்போது அதை பற்றி பேசக் கூடாது என அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுனமூர்த்தி, மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன். பாஜக வெற்றிக்காக பாடுபடுவேன். ஆன்மிக அரசியலுக்காக ரஜினியிடம் இருந்தேன். மீண்டும் அதே நோக்கத்திற்காக பாஜவில் இணைந்துள்ளேன். திமுக தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல் செயல்படுகிறது என அவர் தெரிவித்தார்.