Former Minister kp anbalagan inaugurated: பாலக்கோடு: அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

பாலக்கோடு: தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் (Former Minister kp anbalagan inaugurated) பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய ஆய்வக கட்டிடத்திற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., பூமி பூஜையை போட்டு துவக்கி வைத்தார்.

பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் இடவசதி அதிகரிக்கவும் அங்குள்ள ஆய்வகங்களை மேம்படுத்த ரூபாய் 2.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

பூமி பூஜையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்.

இந்நிலையில், புதிய கட்டிட ஆய்வகங்களுக்கான பூமி பூஜையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மற்றும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் தொ.மு.நாகராசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்னுவேல், பாலக்கோடு அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் மற்றும் நகரக்கழக செயலாளர் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என்று பலர் பூமி பூஜையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Former Minister Sellur Raju: எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்டவர்கள் கிடைத்தால் மிதிப்போம்: செல்லூர் ராஜூ

முந்தைய செய்தியை பார்க்க:OPS Munnetra Kazhagam: ஓ.பி.எஸ் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கலாம்: ஜெயக்குமார்