Laxman Savadi car accident: முன்னாள் துணை முதல்வர் லட்சுமணன் சவதி கார் விபத்து: அதிஷ்டவசமாக‌ உயிர் தப்பினார் சவதி

Savadi narrowly escaped :முன்னாள் துணை முதல்வர் லட்சுமணன் சவதி கார் விபத்தில் சிக்கினார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்தது.

பெல்காம்: Laxman Savadi car accident: முன்னாள் துணை முதல்வர் லட்சுமணன் சவதி கார் விபத்தில் சிக்கினார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக லட்சுமணன் சவதி உயிர் தப்பினார். பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஹருகேரி நகரின் புறநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாணியிலிருந்து கோகாகிற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடை பெற்றுள்ளது. காரில் லட்சுமண சவதி உள்பட‌ 4 பேர் பயணம் செய்தனர்.

கியா நிறுவனத்தின் கார்னிவல் லிமோசின் என்ற சொகுசு கார் (luxury car) இது. ஏர் பேக் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து மற்றும் கார் கவிழ்ந்ததும், லட்சுமண சவதி சன்ரூஃப் வழியாக வெளியே வந்தார். லட்சுமண சவதி, நேரடி உதவியாளர் மற்றும் ஓட்டுநர் உட்பட 3 பேர் காயமின்றி வாகனத்தில் தப்பினர்.

விபத்தில் சிக்கிய‌ லட்சுமண சவதிக்கு (Laxman Savadi ) ஹருகேரி நகரில் உள்ள மல்லிகார்ஜுனா நரகுந்தா மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், லக்ஷ்மண சவதியின் மகன் சித்தானந்த சவதி, தனது தந்தை ஹருகேரி அருகே கார் விபத்தில் சிக்கியதாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார். இறைவனின் அருளால் லட்சுமண சவதி விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார். அவரது ஆதரவாளர்களும், நண்பர்கள், உறவினர்கள், கட்சித் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

விபத்துக்கு பின் சிகிச்சை பெற்று வந்த லட்சுமண சவதி (Laxman Savadi )அதாணி நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அவர் தனது வீட்டின் அருகே ஆதரவாளர்களின் அன்பைக் கண்டு கதறி அழுதார். சிறிது நேரத்தில் உயிர் தப்பிய லட்சுமண சவதி, ஆதரவாளர்களுக்கு கையை அசைத்து வணங்கி விட்டு வீட்டுக்குள் சென்றார். முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் லட்சுமண் சவதிக்கு அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவரது கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.