Fans Celebrating The Victory Of Argentina Messis Fans: அர்ஜென்டினாவின் வெற்றியை தமிழகத்தில் உள்ள மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: அனைத்து ரசிகர்களையும் திரில்.. பரவசம்.. ஆச்சரியம் இப்படியான இறுதிப் போட்டிக்கு (Fans Celebrating The Victory Of Argentina Messis Fans) அனைத்து விதமான அம்சங்களையும் உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதியின் போது ஏற்பட்டது.

உலககோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர்களை தோல்வியற செய்து உலக கோப்பையை தட்டிப்பறித்தது. அதே போன்று அர்ஜென்டினா அணி 3வது முறையாக உலககோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டம், பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், மற்றும் பீனிக்ஸ் குழு

இதற்கு முன்னர் கடந்த 1978 மற்றும் 1986 ஆண்டுகளில் வெற்றி பெற்றது. மெஸ்சியின் கனவு நனவானது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கால்பந்தாட்டத்தின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் கனவும் நிறைவேறியது. உலகில் பல்வேறு கோப்பைகளை தான விளையாடும் அணிக்காக பெற்றுக்கொடுத்திருக்கிறார் மெஸ்சி. அதே போன்று தன்னுடைய நாட்டிற்காக உலகக்கோப்பையை வெற்றிபெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தையும் தற்போது நிறைவேற்றினார்.
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தின்போது மெஸ்சி தன்னுடைய கனவை நிறைவேற்றியுள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை சமூக வலைதளம் மூலம் அனுப்பி வருகின்றனர்.

அதே போன்று அர்ஜென்டினா வெற்றியை பல்வேறு நாடுகளில் கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக இந்தியாவில், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். கேக் வெட்டி, பட்டாசு வெடித்தும் தங்களின் புன்னகையை வெளிப்படுத்தினர். அதிலும் தமிழகத்தில் குக்கிராமங்களிலும் மெஸ்சியின் ரசிகர்கள் நடமானடி ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Central Govt Confirmed Not Linking Aadhaar: ஆதார் இணைக்காதவர்களுக்கு ஓட்டுரிமை இல்லையா? மத்திய அரசு புதிய தகவல்

முந்தைய செய்தியை பார்க்க:12th Convocation of Ambedkar Law University Chennai: சென்னையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழா