Argentina Win Fifa World Cup: உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா

கத்தார்: உலக கோப்பை (Argentina Win Fifa World Cup) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று (18.12.2022) இரவு கத்தாரில் நடைபெற்றது.

இப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடியது. முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்கின்ற முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல் அடித்ததால் ஆட்டம் சமனாகியது. அதே போன்று கூடுதல் நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 3-3 என்ற சமனிலை அடைந்தது.

இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றியது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் உலக தலைவர்கள் அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜென்டினாவுக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணிக்கு ரூ.244 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்தியை பார்க்க:சீனாவில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பு: பெய்ஜிங்கில் லாக்டவுன்

முந்தைய செய்தியை பார்க்க:Actress Jacqueline Fernandez : நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜாமீன்