Extension of Special Train: மதுரை – செகந்தராபாத் வாராந்தி சிறப்பு ரயில் நீட்டிப்பு

மதுரை: Extension of Madurai – Secunderabad Weekend Special Train: மதுரையிலிருந்து தெலங்கானாவின் செகந்தராபாத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை – செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை இறுதி வரை ரயில் சேவை முதலில் அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (Weekend Special Train) (07191) செகந்தராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், (எண் 07192) மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் புதன்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியாலகுடா, நல்கொண்டா (Dindigul, Trichy, Srirangam, Vrudhachalam, Villupuram, Tiruvannamalai, Katpadi, Chittoor, Tirupati, Renikunda, Kutur, Nellore, Ongole, Babatla, Denali, Guntur, Miriyalakuda, Nalkonda) ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு ஏசி 2 அடுக்கு பெட்டிகள், 3 ஏசி 3 அடுக்கு பெட்டிகள், 12 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு ரயில் மேலாளர் மற்றும் ஊனமுற்ற பெட்டிகள் இருக்கும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.