Meeting led by DGP on the occasion of Ganesha Chaturthi: விநாயகர் சதுர்த்தியையொட்டி டிஜிபி தலைமையில் ஆலோசனை

சென்னை: Meeting led by DGP on the occasion of Ganesha Chaturthi. விநாயகர் சதுர்த்தியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மத்திய, மாநில அரசு சார்பில் சிலை வைக்கவும், சிலைகளை கரைக்கவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மேலும் காவல் துறை சார்பில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள இடங்களில் மட்டுமே கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ரசாயன பூச்சு கொண்டு வைக்கப்படுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தமிழகத்தில் அமைதியாக நடத்துவது தொடர்பாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திர பாபு, தலைமையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் காணொளி வாயிலாக சிறப்பு கூட்டம் நேற்று மாலை (30.8.2022) நடைபெற்றது. இதில் அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அரசு வகுத்துள்ள வழிமுறைகளின் படி விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதிப்பது, நிறுவப்பட்ட சிலைகள் கரைக்கப்படும் வரை பாதுகாப்பு அளிப்பது, விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது தொடர்பாக விரிவான அறிவுரைகளை டிஜிபி அவர்கள் வழங்கி எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

மேலும் இப்பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் துறையினருக்கு உறுதுணையாக ஆயுதப்படைக்காவலர்களையும், 10, 000 பயிற்சி காவலர்களையும், தற்போது பயிற்சி முடித்துள்ள 900 உதவி ஆய்வாளர்களையும், ஊர்க்காவல் படையினரையும் ஈடுபடுத்த டிஜிபி உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் தாமரைக்கண்ணன், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையர்கள், மண்டல ஐஜி.,கள், டிஐஜி.,கள் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.