Chief Minister Basavaraj bommai confirmed Corona : முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று உறுதி: தில்லி பயணம் ரத்து

கடந்த ஜனவரியிலும் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அவருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: Chief Minister Basavaraj Bommai Tests corona Positive : பொம்மை சோதனையில் கோவிட் 19 பாசிட்டிவ்: முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக முதல்வர் பசவராஜ் பொம்மையின் தில்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பசவராஜ பொம்மை தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டுரை மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று எனக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனையடுத்து எனது தில்லி பயணம் ரத்து (Trip to Delhi cancelled) செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை 2 நாள் பயணமாக‌ இன்று முதல் தில்லி செல்லவிருந்தார். இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் ஆசாதி கா அமிர்த மஹோத்சவ் மற்றும் நிதி ஆயோக் கூட்டங்களில் முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்க இருந்தார். இன்று காலை 11:30 மணிக்கு தில்லி சென்றுவிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி(7th of August) பெங்களூரு திரும்புவதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் (Cabinet expansion in the state) அல்லது மாற்றி அமைப்பது குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவது தொடர்பாக பேசப்போவதாக‌ முதல்வர் பசவராஜ் பொம்மையும் ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெங்களூருவுக்கு வந்திருந்தபோது, ​​கர்நாடக‌த்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முதல்வர் பசவராஜ பொம்மை முன்மொழிந்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தை தில்லியில் பேசலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பொம்மையிடம் கூறியதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரியிலும் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அவருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பொம்மையின் தில்லி பயணம் ரத்து ஆனதால், பாஜகவில் அமைச்சர் பதவிக்காக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது (It has disappointed those who were waiting for the ministerial post).

அண்மையில் ச‌ந்தோஷ் கே. பாட்டீல் (Santosh K. Patil) என்ற ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சராக பதவி வரும் கே.எஸ். ஈஸ்வரப்பாதான் காரணம் என்று எழுதி இருந்தார். இதனையடுத்து ஈஸ்வரப்பாவை ராஜிநாமா செய்யுமாறு எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில் அண்மையில் கே.எஸ்.ஈஸ்வரப்பா (KS Iswarappa) அதில் குற்றமற்றவர் என்று போலீஸார் தெரிவித்ததையடுத்து, மீண்டும் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் அமைச்சரவையில் சேரத் தயாராக உள்ளனர். அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை நீக்கவும், பசவராஜ் பொம்மை நினைத்திருந்தார். எனவே தில்லிக்கு சென்று மேலிடத்தலைவர்களுடன் ஆலோசித்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முடிவு எடுக்க இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமைச்சராக உள்ளவர் நிம்மதி அடைந்துள்ளனர். அமைச்சர் ஆவதற்காக காத்திருந்த ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் குணமடைந்து, வழக்கம் போல தனது பணிகளை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.