Chennai Police Alert: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: போக்குவரத்து முன்னெச்சரிக்கை

சென்னை: Chess Olympiad Torch Run: செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நாளை நடைபெற உள்ளதால் பொதுமக்கள் முன்கூட்டியே பயணம் மேற்கொள்ள சென்னை காவல்துறை (Chennai Police has requested) வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் 44வது உலகச் சதுரங்கப் போட்டி வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 27.07.2022 – மாலை 16.00 மணி முதல் 19.00 மணி வரை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம் (Jawaharlal Nehru Indoor Stadium) வரை ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது.

இந்த ஜோதியானது மாநிலக்கல்லூரி மைதானத்திலிருந்துத் துவங்கி காமராஜர் சாலை, – இராஜாஜி சாலை, கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈவெரா சாலை, இராஜாமுத்தையா சாலை வழியாக உள்விளையாட்டரங்கத்தினை அடைய உள்ளது.

இதனையொட்டி, அந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் (Traffic congestion) ஏற்பட வாய்ப்புள்ளதால் அன்றைய தினம் முன்கூட்டிய திட்டமிடலும் பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.