Chandrashekar guruji murder : சரள வாஸ்து ஜோதிடப்புகழ் சந்திரசேகர குருஜி படுகொலை

ஹூப்பள்ளி: Chandrashekar guruji murder : சரள வாஸ்து ஜோதிடப்புகழ் சந்திரசேகர் குருஜி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். ஹூப்ளியில் உள்ள தனியார் விடுதியில் அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. வாடிக்கையாளர் போல வந்தவர்கள் ஹுப்பள்ளி ஹோட்டல் வரவேற்பறையில் சந்திரசேகர் குருஜியை கொலை செய்துவிட்டு கொலையாளிகள் தப்பியோடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சந்திரசேகர குருஜி தனது எளிய வாழ்க்கை, எளிமையான கல்விக்கூடம், எளிய வாஸ்து ஆகியவற்றால் பிரபலமானவர். கொலை நடந்த உடனேயே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மாநகர போலீஸ் கமிஷனர் லாபுராம் சம்பவ இடத்தை பார்வையிட்டார். குருஜியின் உடல் கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொலையாளிகள் இருவரும் அவரின் வாடிக்கையாளர்கள் போல‌ ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் சந்திரசேகர் குருஜியின் காலில் விழுந்து வணங்கிய பின்னர், இருவரும் சேர்ந்து சந்திரசேகர் குருஜியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சந்திரசேகர குருஜி கொல்லப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை. சந்திரசேகர குருஜி கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சந்திரசேகர் குருஜி கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஹூப்பள்ளியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். புதன்கிழமை ஹோட்டல் அறையை காலி செய்யவதாக இருந்தாராம். ஆனால் அதற்குள் இன்று குருஜி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். முன் கூட்டியே திட்டமிட்டு கொலை நடந்ததற்கான‌ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குருஜி கொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள லாபுராம், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை செய்து வருகிறார்.