Cause of Pudukottai Chariot Accident: புதுக்கோட்டை தேர் விபத்துக்கான காரணம்; பொதுமக்கள் கருத்து

புதுக்கோட்டை: Cause of Pudukottai Chariot Accident: புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர், திருக்கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.

திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும். ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக் கிறார்கள். குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமா னங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்ப டியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.

திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக் கிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா, ஆனி திருவிழா, ஆடிப்பூரம் மற்றும் சித்ரா பௌர்ணமி கிரிவலமும் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளாகும்.

இந்நிலையில், ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9.30 மணியளவில் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக சுவாமி அம்பாள் உற்வர்களை வைக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த போது, எதிர்பாராத விதமாக முன் பக்கமாகக்கவிழ்ந்தது. இவ்விபத்தில் தேரில் அருகில் இருந்த ஏறத்தாழ 15 பேர் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பொதுமக்கள் தேரின் அடியில் சிக்கியவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர கால ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுமார் 20 லட்சம் செலவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்ன புதுப்பிக்கப்பட்டதாகும். கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஓடாமல் தேர் நிலையிலேயே நின்றிருந்தது.இத்தேரை வெள்ளோட்டம் பார்த்திருக்க வேண்டும். அதைச்செய்யாமல் தேரோட்டம் நடத்தியதுடம், தேரின் மேல் தளத்துக்கு ஏற்ப உற்சவர் சிலைகள் வைக்கும் பீடம் சரியான உயரத்தில் அமைக்காததும், அதற்காக பலகைகள் பலமில்லாமல் இருந்ததும் இந்த விபத்துக்கு காரணம் என பக்தர்கள் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தல வரலாறு:
காமதேனுவுக்கு தேவேந்திரனால் சாபம் ஏற்பட்டு தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து சேர்ந்தது. பின்பு கபில மகரிஷி, மங்கள மகரிஷி ஆகியோரை வணங்கி ஆலோசனை கேட்டது. அதற்கு, அவர்கள்,”தினந்தோறும் காசி போய் கங்கை நீரை கொண்டு வந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து விட்டு, மீதியை பாறையை கீறி அதில்விட்டு விடு” என்று சொல்கிறார்கள். பசுவின் பக்தியை சோதிக்க ஈஸ்வரன் புலியின் ரூபம் எடுத்து திருவேங்கை வாசல் வந்து சோதிக்கிறார். பசுவின் பக்தியை அறிய, “உன்னை சாப்பிட்டுவிடுவேன்” என்று இறைவன் பயமுறுத்தினார். காமதேனுவோ,”விரத பூஜையை முடித்து விட்டு வருகிறேன்” என புலியாகிய ஈசனிடம் சொல்லிவிட்டு இங்குள்ள சுவாமியை வணங்க வருகிறது. வணங்கியபின் மீண்டும் தன் சொல்லைக்காக திருவேங்கைவாசல் வருகிறது. அங்கு, காமதேனுவுக்கு, புலியாகிய இறைவனின் காட்சியும், மோட்சமும் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகச் சிறந்த குடைவறைக் கோயிலாக இன்றும் திகழ்கிறது.

சிவபெருமான் காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவ தலம். கிழக்கு பார்த்திருக்கும் கோகர்ணேஸ்வரர் சன்னதி. பிரகதாம்பாள் புதுக்கோட்டை மன்னரோடு நேருக்கு நேர் பேசிய தெய்வம் என்று வரலாற்று கதை ஒன்று கூறுவதால் பிரகதாம்பாளைப் பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர்.

இத்தலத்திற்கு அருகில் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், ஆத்மநாத சுவாமி திருக்கோயில், சிகாநாதர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.

இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால்,”அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை” எனக்கூறி, சிறிதுவெல்லத்தை எடுத்து வைத்துவிட்டுத் தேடினால் உடனே கிடைத்துவிடும்.