Bundles of liquor in a secret room: தர்மபுரி அருகே ரகசிய அறையில் மூட்டை மூட்டையாக மதுபானங்கள்

தர்மபுரி: Bundles of liquor in a secret room near Dharmapuri. பென்னாகரத்தில் வீட்டில் ரகசிய அறை அமைத்து மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த மாமியார் மருமகள் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மதுபாட்டில்கள் இரவு பகலாக தாளாரமாக கிடைக்கிறது.

இது போன்று சந்துக்கடைகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். இதில் பென்னாகரம் காவேரி ரோடு பகுதியில் ஒரு வீட்டில் மாமியார் மருகள் சேர்ந்து 4 பேர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களது வீட்டில் சோதனை செய்த போது, வீட்டில் இருந்த டிவி பின்புறம் ரகசிய அறை அமைத்துள்ளனர். அதில் ஆயிரகணக்கான மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து காவல்துறையினருக்கு டிமிக்கு கொடுத்து வந்துள்ளனர்.

பின்னர் அந்த அறையில் இருந்த 600க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பின்னர் மாமியார் லட்சுமி மற்றும் மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்த போது, தீபாவளி பண்டிகையொட்டி மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்க்காக வைத்திருந்தாக கூறினர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களில் சந்து கடையில் மது விற்பனை செய்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.