aiadmk anbalagan arrested : புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து (aiadmk anbalagan arrested) இல்லாத காரணத்தினால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாததால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ரங்கசாமி வெளிப்படையாக பேசியதை அனைவரும் பார்த்திருப்போம்.

இந்நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அம்மாநில அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் முழு அடைப்பு நடத்தப்படுவதற்கு முன்பாக மாநில செயலாளர் அன்பழகனை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். இருந்தாலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சொன்னபடி முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு மற்றும் பொதுமக்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுவைக்கு மாநில அந்தஸ்து வந்தால் அனைத்து கட்சியும் வரவேற்போம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கூட வரவேற்பு கொடுக்கும் என அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.