Actor Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து

சென்னை: Actor Sivakarthikeyan met chess player Pragnananda : இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

அண்மையில் செர்பியாவில் நடைபெற்ற பாரிசின் ஓபன் செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. 16 வயதுடைய இவர் நார்வே செஸ் ஓபன் போட்டியில் ஏ குரூப் (A group) பிரிவில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக சாம்பியன் கார்ச்சனை 2 முறை தோற்கடித்தவர் பிரக்ஞானந்தா. இவர் விரைவில் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் (Mamallapuram) நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பிரக்ஞானந்தாவை சந்தித்து (Actor Sivakarthikeyan met chess player Pragnananda) செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தனது சுட்டுரையில் பிரக்ஞானந்தா தகவலை பகிர்ந்துள்ளார்.

இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு, தனது சுட்டுரையில் பதில் அளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தம்பி (nice to meet you brother) என்று பதிவிட்டுள்ளார்.

உலக சாம்பியன் கார்ச்சனை, பிரக்ஞானந்தா வெற்றி கொண்டபோதும், அவரை நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.