Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பரில் 62.71 லட்சம் பேர் பயணம்

சென்னை: 62.71 lakh passengers traveled by Chennai Metro train in October. கடந்த அக்டோபர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 62.71 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 370 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும் தற்பொழுது பயண அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரம் 240 அதிகரித்துள்ளதாகவும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது;

01.01.2022 முதல் 31.08.2022 வரை மொத்தம் 3,57,82,117 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.09.2022 முதல் 30.09.2022 வரை மொத்தம் 61,12,906 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.10.2022 முதல் 31.10.2022 வரை மொத்தம் 61,56,360 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.11.2022 முதல் 30.11.2022 வரை மொத்தம் 62,71,730 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.11.2022 அன்று 2,47,352 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

நவம்பர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18,22,703 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதுதவிர அக்டோபர் மாதத்தில் 36,33,056 லட்சம் பயணிகள் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்திய நிலையில் நவம்பர் மாதத்தில் 40,23,296 பயணிகள் பயண அட்டையை பயணித்துள்ளார்கள். அக்டோபர் மாதத்தை காட்டிலும் நவம்பர் மாதத்தில் 3,90,240 பயணிகள் அதிகமாக பயண அட்டையை பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்.