6 lakh people travel by train from Chennai: தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 6 லட்சம் பேர் ரயில் பயணம்

சென்னை: 6 lakh people travel by train from Chennai. சென்னையிலிருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் தங்களது சொந்த ஊருக்கு ரயில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கைளை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் தொழில், வியாபாரம், கல்வி என தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அதன் அடிப்படையில் தீபாவளியையொட்டி கடந்த சில நாட்களாகவே சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 4 ஆயிரத்து 772 அரசு பஸ்களில் 2.43 லட்சம் பேர் பயணம் செய்ததாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. பரபரப்பாக இருந்து வந்த சாலைகள் தற்போது மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையில் இருந்த பல்வேறு ஊர்களுக்கு 6 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதின்படி, தீபாவளியை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலான முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து சுமார் 6 லட்சத்து 1,288 பேர் தங்களது ஊர்களுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளனர்.