2023 New Year: ஆங்கில புத்தாண்டை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் வரவேற்ற மக்கள்

சென்னை: ஒவ்வொரு வருடம் ஜனவரி 1ம் தேதி ஆங்கில (2023 New Year) புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. முதன் முறையாக நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் அடுத்தடுத்து வரவேற்றனர்.

அதே போன்று இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு 2023 புத்தாண்டு பிறந்தது. இதனையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.

இந்நிலையில், 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புதிய ஆண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அனைத்து மக்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.