Chennai Metro train: சென்னை மெட்ரோ இரயில்களில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்

சென்னை: 2.66 lakh people travel in Chennai Metro trains in a single day. ஒரே நாளில் சென்னை மெட்ரோ இரயில்களில் 2.66 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இதுநாள் வரை இல்லாத அளவு (13.01.2023) அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,66,464 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 21,731 பயணிகளும், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,649 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 13,607 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 12,909 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில்களில் ஜனவரி 13, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

வரிசை எண்தேதிபயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை
113.01.20232,66,494
214.01.20231,62,525
315.01.20231,08,160
416.01.20231,34,167
517.01.20231,65,399