Rishabh Pant shifted from ICU: தொற்று பயம் காரணமாக ரிஷப் பந்த் ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றம்

டேராடூன்: Rishabh Pant shifted from ICU to private suite over infection scare. கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தொற்று பயம் காரணமாக ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) இயக்குனர் ஷியாம் சர்மா இன்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கினார். அவரது நெற்றியில் வெட்டுக்கள் மற்றும் அவரது வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிதல், அத்துடன் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கால்விரல் ஆகியவற்றில் காயங்கள் உட்பட பல காயங்களுக்கு ஆளானார். அவருக்கு முதுகில் சிராய்ப்பும் ஏற்பட்டது. டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.

இதனையடுத்து பந்த் ஆரம்பத்தில் டெஹ்ராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தொற்று பயம் காரணமாக ரிஷப் பந்த் ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்படுவதாக டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) இயக்குனர் ஷியாம் சர்மா இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தொற்றுநோய் பயம் காரணமாக, நாங்கள் அவரை ஒரு தனி அறைக்கு மாற்றுமாறு அவரது குடும்பத்தினரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் கூறியுள்ளோம். அவர் நன்றாக இருக்கிறார். விரைவில் குணமடைவார் என்று அவர் கூறினார்.