Arshdeep Singh Nominated: ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர் விருதுக்கு அர்ஷ்தீப் சிங் பரிந்துரை

துபாய்: 2022ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யில் வளர்ந்து வரும் (Arshdeep Singh Nominated) கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 வீரர்களில் அர்ஷ்தீப் சிங்கும் ஒருவர் ஆவார். அதில் மற்ற மூன்று வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இப்ராஹிம் ஜாடன், நியூசிலாந்தின் பின் ஆலன்.

மேலும், ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான அறிமுகமான அர்ஷ்தீப் ஒரு ஆண்டில் 20 ஓவர் போட்டியில் 33 விக்கெட்டை எடுத்தார். அதே போன்று நியூசிலாந்து போட்டியிலும் இடம் பிடித்திருந்தார்.

வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் 20 ஓவர் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 13.30 உடன் சராசரியாக 18.12 பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை காட்டினார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜடான் ஒருநாள் போட்டியில் 431 ரன்னும், 20 ஓவர் போட்டியில் 367 ரன்களும் அடித்துள்ளார். இதில் மூன்று சதங்களும் அடங்கும். ஆலன் தன்னுடைய 20 ஓவர் போட்டியில் 411 ரன்களும், ஒருநாள் போட்டியில் 381 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.