Edappadi Palaniswami : இன்று தில்லி செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக தலைமை அலுவகத்தின் சாமி எடிப்பாடி பழனிசாமியிடம் ஓப்படைக்கப்பட்ட நிலையில், அவர் இன்று தில்லிக்கு செல்வதால் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

சென்னை: Edappadi Palaniswami is going to Delhi today: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நடைபெறும் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தில்லிக்கு செல்ல உள்ளார்.

இந்தியக் குடியரசு தலைவராக பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்தின் (president RamNath Govind) பதவி காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி நடைபெற்ற தேர்தலில் திரௌபதி முர்மு குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 25-ஆம் தேதி குடியரசு தலைவராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபச்சார விழா தில்லியில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளவதற்காக இன்று தில்லிக்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார். ஆனால் அவர் இதற்காக மட்டும் அங்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, அதன் தலைமை அலுவலகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் (O. Panneer Selvam) ஆதரவாளர்கள் மேற்கொண்ட முயற்சியை அடுத்து, அங்கு பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவார்களுக்கு மோதல் நடைபெற்றது.

இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக வருவாய்த்துறை சார்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலக சாவியை தங்களின் ஒப்படைக்க வேண்டும் என பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில்(High Court) வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவகத்தின் சாமி எடிப்பாடி பழனிசாமியிடம் ஓப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் இன்று தில்லிக்கு செல்வதால் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. பழனிசாமி பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டுவிட்டு, தில்லியில் பாஜகவின் முக்கியத் தலைவர்களையும் (BJP senior leaders) அவர் சந்திக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.