Ragul Gandhi Explain: ஒற்றுமை யாத்திரை எதற்காக தெரியுமா? ராகுல் காந்தி விளக்கம்

சண்டிகர்: அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் (Ragul Gandhi Explain) என்ற வித்தியாசமான பாதையை தேசத்திற்குக் தெரியப்படுத்தவே இந்த யாத்திரையைத் துவங்கியுள்ளோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியில் முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு நடத்தி வருகிறார். இந்த யாத்திரையானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற நிலையில் யாத்திரை பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரசில் நடந்தது.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்கின்ற வித்தியாசமான பாதையை தேசத்திற்குக் தெரியபடுத்தவே நாங்கள் நினைத்திருந்தோம். அதற்காகவே இந்த யாத்திரை துவக்கினோம். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.