Ambani School gets bomb threat: மும்பை திருபாய் அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: Mumbai’s Dhirubhai Ambani School gets bomb threat call. மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளிக்கு மிரட்டல் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பள்ளியை வெடிக்கச் செய்வதாக மிரட்டியுள்ளார்.

மும்பை காவல்துறை கூறுகையில், பள்ளியின் லேண்ட்லைனுக்கு நேற்று மாலை 4:30 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வைத்ததாக மர்ம நபர் தொலைபேசியில் தெரிவித்ததாகவும், இதனையடு்து அந்த மர்ம நபர் அழைப்பை துண்டித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

உடனே பள்ளி நிர்வாகம் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. பள்ளியின் புகாரின் அடிப்படையில், பிகேசி காவல் நிலையத்தில் IPC 505 (1) (B) மற்றும் 506 பிரிவுகளின் கீழ் மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில், அழைப்பாளரைக் கண்டுபிடித்துள்ளதாகவும், குற்றவாளியை விரைவில் கைது செய்வதாகவும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில், எச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் மருத்துவமனையை வெடிக்கச் செய்வதாகவும், மேலும் அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.