Former Union Minister Sharad Yadav Dies: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனாதாதள கட்சித் (Former Union Minister Sharad Yadav Dies) தலைவருமான தனது 75வது வயதில் நேற்று (ஜனவரி 12) இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் உறுத்தப்படுத்தினார். சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்திருப்பதால் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த 2017ம் ஆண்டு ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., மற்றும் அமைச்சர் என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.