Panneer selvam wrote Letter : த‌னது அனுமதி இல்லாமல் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது: வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Image Credit : Twitter.

சென்னை: O.Panneer selvam wrote Letter to the Banks : அதிமுகவின் கணக்குள்ள வங்கிகளுக்கு, தனது அனுமதி இல்லாமல் எந்த பண பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் (O.Panneer selvam) எழுதி உள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: அதிமுகவின் பொருளாளராக நான் தான் இருக்கிறேன். எனவே அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகள் எனது அனுமதி இல்லாமல் எந்த வரவு, செலவுகளையோ, பண பரிவர்த்தனையை செய்யக்கூடாது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி நான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருக்கிறேன்.

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே எனது அனுமதி இல்லாமல் எந்த பண பரிவர்த்தனையும் செய்யக்கூடாது. என்னை கேட்காமல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால், சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை வானாவரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் திண்டுகல் சீனிவாசன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பாக‌, எடப்பாடி பழனிசாமி அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொருளாளர் என ஓ.பன்னீர்செல்வம் (O.Panneer selvam), திண்டுகல் சீனிவாசன் ஆகியோர் உரிமை கொண்டாடுவதால், வங்கிகள் யாருக்கு பண வர்த்தனை செய்வது என குழம்பிப் போயியுள்ளன.