Erode By Elections: ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. எங்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கலாமே? கே.எஸ்.அழகிரி

நெய்வேலி: பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து (Erode By Elections) வரும் கட்சி என்று சொல்லும் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் எங்களை எதிர்ப்பதற்கு தைரியம் உள்ளதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணியமாகக் காங்கிரஸ் கட்சியை அழைத்து காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

ஆனால் அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரையில் ஈரோடு தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வா என்ற போட்டி உள்ளது. மேலும், தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வரும் கட்சி என்றும் கூறும் அண்ணாமலை ஈரோடு சட்டமன்றத் தொகுதியில் தங்களை எதிர்த்து அண்ணாமலை நிற்கத் தயாரா என்றும் தைரியம் இருந்தால் நிற்கட்டும் எனவும் சவால் விடுகிறேன் என்றார்.